ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், குஜராத் அணியின் கேப்டன் பொறுப்புக்கு சுப்மன் கில் இன்னும் தயாராகவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் விமர்சகருமான வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 243 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 232 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.